லிவ் இன் பார்ட்னரை பார்ட்டி வைத்து போட்டுத் தள்ளிய பெண்... டெல்லியில்!
டெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனை, திட்டமிட்டு கொலை செய்த பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த நீத்துவும், யோகேந்திர சிங்கும் கடந்த ஆறு வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்துள்ளனர். சமீபகாலமாக தனது மதுப்பழக்கத்தால் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார் யோகேந்திரா.
இதனால் அவரை விட்டு விலக நினைத்த நீத்து, ரோஹித் மற்றும் ஆஷா என்ற தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொல்ல முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று நீத்துவின் வீட்டிற்கு ரோஷித்தும், ஆஷாவும் வந்துள்ளனர்.
அப்போது யோகேந்திராற்கு அதிகளவு மது கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மயக்க நிலைக்கு சென்ற யோகேந்திராவை மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் அவரை உடலை காரில் எடுத்துச் சென்று நரேளா பகுதியில் முகத்தைச் சிதைத்த நிலையில் போட்டுச் சென்றனர்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அது யோகேந்திர சிங் உடல் என அடையாளம் காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நீத்துயும், யோகேந்திராவும் சேர்ந்து வாழ்ந்தது தெரியவந்தது.
விரைந்து செயல்பட்ட போலீசார் நீத்துவிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து யோகேந்திராவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நீத்துவையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.