பரபரக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம்.. பாஜகவிற்கு யாரெல்லாம் ஆதரவு.. உண்மையான பலம் என்ன?
மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதேபோல் இன்னும் சில கட்சிகள் பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.
நாளை மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.சரியாக 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லோக் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிவ சேனா ஆதரவு
இந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று சிவ சேனா முடிவெடுத்துள்ளது. முன்னாள் நண்பர்களான சிவசேனாவும் பாஜகவும் இடையில் கொஞ்சம் பிரச்சனையில் இருந்தது. ஆனால் அதை பொருட்படுத்தாமல், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என்று சிவ சேனா தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சிக்கு லோக் சபாவில் 18 எம்.பிக்களின் பலம் இருக்கிறது.

இன்றும் இரண்டு கட்சிகள்
அதேபோல் பாஜகவிற்கு லோக் ஜன சக்தி கட்சி ஆதரவு அளிக்க இருக்கிறது. அந்த கட்சிக்கு 6 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் சிரோன்மணி அகாலிதளம் பாஜகவரிக்கு ஆதரவு அளிக்கிறது. அந்த கட்சிக்கு 4 உறுப்பினர் பலம் இருக்கிறது. இன்னும் கடைசி நேரத்தில் வேறு சில கட்சிகள் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பலம் என்ன
தற்போதையை நாடாளுமன்ற பலம் 535. இதில் வெற்றிபெற 268 உறுப்பினர்கள் தேவை. பாஜகவிடம் தனியாகவே சபாநாயகரையும் சேர்த்து 274 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மேலே குறிப்பிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 313ஐ தொடுகிறது. இதனால் பாஜக கட்சிக்கு நாளைய வாக்கெடுப்பில் தோல்வியை தழுவ வாய்ப்பே இல்லை.

அதிமுகவின் நிலைப்பாடு
ஏற்கனவே அதிமுக கட்சி இந்த வாக்கெடுப்பில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் என்று மறைமுகமாக கூறியுள்ளது. இதனால் பாஜக நாளை வாக்கெடுப்பில் 350 வாக்குகளை தாண்ட வாய்ப்புள்ளது. சமயத்தில் அதிமுக யாருக்கும் ஆதரவு அளிக்காமல் வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications