சிபிஐ இயக்குநரின் சந்திப்பு விவரங்கள்.. பிரசாந்த் பூஷனிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் மற்று நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்களில் தொடர்புடையோரை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா என்பது பிரசாந்த் பூஷனின் புகார். இதனால் ரஞ்சித் சின்காவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார் பிரசாந்த் பூஷன்.
இந்த வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா வீட்டின் வருகைப் பதிவேடு என்ற ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்தார். ஆனால் இதை நிராகரித்த ரஞ்சித் சின்கா, வருகைப் பதிவேட்டில் 90% பொய்யாக எழுதப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, பிரசாந்த் பூஷனுக்கு இந்த வருகைப் பதிவேட்டை கொடுத்தது யார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications