ஹேமந்த் சோரனின் மனைவியை பின்னுக்கு தள்ளி ஜார்கண்ட் முதல்வராகும் சாம்பை சோரன்! யார் இவர் தெரியுமா
ராஞ்சி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஜார்கண்ட் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் மாநில அரசியலில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஹேமந்த் சோரனிடம் நில சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் அவரிடம் பலமுறை அமலாக்கத்துறை விசாரித்த நிலையில் இன்று
ராஞ்சியில் உள்ள இல்லத்தில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பதவிக்கு ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பெயர் முன்னிலையில் இருந்தது. ஆனால் எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது கல்பனா சோரனை விட சாம்பை சோரனுக்கு தான் அதிகம் இருந்தது. இதனால் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஹேமந்த் சோரன் கைதாகி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சாம்பை சோரன் ஆளுநரை சந்தித்து முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தான் ஜார்கண்ட்டின் புதிய முதல்வராக தேர்வாகி உள்ள சாம்பை சோரன் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது முதல்வராக தேர்வாகி உள்ள சாம்பை சோரன், தற்போதைய ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவர் சாராய்கேலா கார்சவான் மாவட்டத்தின் ஜலின்கோட்டா கிராமத்தை சேர்ந்த சிமால் சோரன் என்ற விவசாயியின் மூத்த மகன். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாய பணிகளை செய்து வந்தார். 10ம் வகுப்பு வரை அரசு பள்ளி வரை படித்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 4 மகன்கள், 3 மகள்கள் பிறந்தனர். 90ஸ் காலத்தில் ஜார்கண்ட் புதிய மாநிலமாக உருவாக வேண்டும் என்ற சாம்பை சோரன், ஷிபு சோரனுடன் இணைந்து ஜார்கண்ட் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி போராடிய ஜார்கண்ட் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அவர் ‛ஜார்கண்ட் புலி' என்ற பெயரை பெற்றார். இதன்மூலம் அரசியலுக்குள் நுழைந்த சாம்பை சோரன் சரைகேலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார்.
அதன்பிறகு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தார். இவர் முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியும் பல்வேறு துறை அமைச்சராக செயல்பட்டார். இப்போதைய காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications