"உறுப்பு".. ராத்திரி 2 மணிக்கு கிச்சனில், அடுப்பை பற்ற வைத்த "தர்மபத்தினி"..இந்த அக்கிரமத்தை பாருங்க
போபால்: இந்த கொடுமையை பாருங்க.. ராத்திரி 2 மணிக்கு சிக்கனுக்கு போய், சமையல் எண்ணெய்யை அடுப்பில் வைத்து சூடாக்கியிருக்கிறார் இளம் மனைவி பாவனா..!!
மத்திய பிரதேசம் குவாலியர் கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது மாதவி என்ற நகர்.. இங்கு வசித்து வருபவர் சுனில் குமார்.. இவர், வங்காள தேசம் டாக்காவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. மனைவி பெயர் பாவனா.

வெளியூர்: கணவன் வெளியூரில் வேலைபார்த்து வருவதால், விடுமுறைக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து போவார்.. அப்படித்தான், சில நாட்களுக்கு முன்பு, லீவில் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போது, பக்கத்து வீட்டுப்பெண் சுனிலிடம், "நீங்கள் வீட்டில் இல்லாததால், உங்கள் மனைவி என் கணவருடன் நீண்ட நேரம் பேசுகிறார்.. அதை என்னவென்று விசாரியுங்கள்" என்று புகார் சொல்லியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ந்த சுனில், "இதை பற்றி பாவனாவிடம் விசாரிப்பதாக சொல்லியிருக்கறார்..
பிறகு, பாவனாவிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. அதற்கு பாவனா, நான் யாரிடமும் பேசவில்லை என்று சொல்லி சாதித்துள்ளார்.. இதனிடையே, மறுபடியும் சுனில் வீட்டிற்கு வந்திருக்கிறார்.. அப்போது பாவனா, அந்த இளைஞனிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்... இதை கண்ணெதிரே பார்த்த சுனில், மனைவியை கண்டித்தார்.. இனிமேல் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று எச்சரித்தார்.. ஆனால் பாவனா கேட்கவில்லை..
ஆத்திரம்: மறுபடியும் மறுபடியும் போனில் பேசிக் கொண்டேயிருந்ததால், வெறுப்படைந்த சுனில், பாவனாவின் செல்போனை எடுத்து வைத்துக்கொண்டார். அந்த செல்போனை சுனில் எங்கே வைத்திருக்கிறார் என்றும் பாவனாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.சம்பவத்தன்று வழக்கம்போல், சுனில் தூங்க சென்றுவிட்டார்..
ஆனால், செல்போன் இல்லாமல் பாவனால் தூங்க முடியவில்லை.. நள்ளிரவு 2 மணி ஆகிவிட்டது.. சுனில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.. இந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்த பாவனா, மெல்ல எழுந்து கிச்சனுக்கு போனார்.. அடுப்பை பற்ற வைத்து, சமையல் எண்ணெயை சூடாக்கினார்...
அதற்கு பிறகு, கொதிக்க கொதிக்க எண்ணெயை கொண்டு வந்து, கணவனின் அந்தரங்க பகுதியில் ஊற்றிவிட்டார்.. தூங்கி கொண்டிருந்த கணவர், வலியால் அலறி துடித்தார். அவர் துடிப்பதை பார்த்ததும், மனைவி வீட்டை விட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார். சுனிலின் அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தில் ஓடிவந்தனர்.. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்..
வெந்த உறுப்பு: ஆனால், அதற்குள் அந்த பகுதி 70 சதவீதம் எரிந்துவிட்டது.. பிறகு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர்.. தீவிர சிகிச்சையில் உள்ள சுனிலிடம் வாக்குமூலத்தை பெற்றனர்.. மனைவி மீது வழக்கையும் பதிவு செய்தனர்.. ஆனால், பாவனாவை இன்னும் காணவில்லை. தேடிக் கொண்டிருக்கிறார்கள்... போன் பேசக்கூடாது என்று சொன்னதற்கே இந்த தண்டனையா என்று குவாலியரே மிரண்டு கிடக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications