ராஜஸ்தானில் இதை யாருமே எதிர்பார்க்கவே இல்லை.. பாஜக vs காங்கிரஸ்.. வெல்லப்போவது யார்.. புது சர்வே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடந்து வருகிறது.. அங்கு இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஜுரம் ஆரம்பித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 200 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே கட்டமாக வரும் நவ. 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ராஜஸ்தான் தேர்தல்: ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாகப் போட்டி இருப்பதால், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் எனப் போராடும் நிலையில், மறுபுறம் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போராடுகிறது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கம் முதலே அனல் பறக்கிறது. இரு கட்சிகளும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறது.
இதற்கிடையே ராஜஸ்தான் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த லோக்போல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இப்போது கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
வெல்வது யார்: அங்கு மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க 101 இடங்களாவது தேவை.. அதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை இழக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அங்கே காங்கிரஸ் கட்சியால் 80-92 இடங்கள் வரை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி 41- 43% வரை வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக அங்கே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. மொத்தம் உள்ள 200 சீட்களில் பாஜக 96-108 இடங்களில் வெற்றி பெறும் என்று லோக்போல் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பாஜக 43- 46% வரை வாக்கு வங்கியைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, மீண்டும் ராஜஸ்தானில் ஆட்சிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள மற்ற கட்சிகள் 13-15% வரை வாக்குகளைப் பெறும் என்றும் இதன் மூலம் 12- 18 சீட்களில் பெறும்.
கடும் போட்டி: இதன் மூலம் இந்த முறை ராஜஸ்தானில் கடும் போட்டி இருக்கும் என்றும் அதில் பாஜகவுக்குச் சற்று வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதும் உறுதியாகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக அப்போது வெறும் 73 இடங்களில் மட்டுமே வென்றது.. அதேபோல சுயேச்சைகள் 13 இடங்களிலும் மாயாவதியின் பகுஜுன் சமாஜ் 6 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications