நம்மிடம் மோதினால் அழிவுதான்.. ரம்ஜான் விழாவில் மமதா பானர்ஜி பகிரங்க எச்சரிக்கை
கொல்கத்தா: யாரெல்லாம் நம்முடன் மோதுகிறார்களோ, அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதுதான் நமது கோஷம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அவர் முஸ்லீம்கள் மத்தியில் உரையாற்றியபோது, அரசியல் எதிராளிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்க அவர் தயங்கவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில், பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மமதா பானர்ஜிக்கு ஷாக் கொடுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மமதா பானர்ஜி இன்று முஸ்லீம்கள் மத்தியில் ஹிந்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
விட்டுக்கொடுத்தலுக்கு, இந்துக்களும், ஒற்றுமைக்கு முஸ்லிம்களும், அன்புக்கு கிறிஸ்தவர்களும், தியாகத்திற்காக சீக்கியர்களும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இதுதான் நமது அன்பிற்குரிய இந்தியா. இந்த ஒற்றுமையை நாம் பாதுகாப்போம். நம்முடன் யாரெல்லாம் மோதுகிறார்களோ, அவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள் என்பதே நமது கோஷம். இவ்வாறு மமதா பானர்ஜி தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இங்கு பயப்படுவதற்கு எதுவும் கிடையாது. சில நேரங்களில் சூரியன் உதயமாகும் போது அதன் ஒளிக்கதிர்கள் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஆனால், சற்று நேரம் கழித்து அவை மங்கலாகி விடும். எந்த அளவுக்கு வேகமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே அளவுக்கு வேகமாக அவர்கள் வெளியேறத் தான் போகிறார்கள், என்று பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
Today, like previous years, I attended #Eid prayers at Red Road and exchanged greetings with all.
— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2019
Some pictures of the occasion are uploaded here for all of you. #EidMubarak once again pic.twitter.com/I9gsNAZZuO
தேர்தலுக்கு, முன்னதாக, மமதா பானர்ஜி பயணித்த வாகனத்தை, சுற்றிலும் நின்று கொண்ட பாஜக தொண்டர்கள், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். காரிலிருந்து இறங்கி வந்து அவர்களை மமதா பானர்ஜி எச்சரித்தார்.
மேலும், மேற்குவங்கத்தில், 'ஜெய் மா காளி' என்று தான் சொல்ல வேண்டும், அல்லது ஜெய்ஹிந்த் என்று சொல்ல வேண்டும், என்று மமதா பானர்ஜி தெரிவித்தார். மதரீதியாக மேற்கு வங்கத்தில் பாஜக பிளவை ஏற்படுத்தி வருவதாக மமதா குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications