35 ஏக்கர் நிலம்.. கேரள அரசிடமே திரும்ப தரும் கோகோ கோலா.. அதிரடி முடிவின் பின்னணி என்ன?
பாலக்காடு: கோகோ கோலா நிறுவனம் பாலக்காடு அருகே பிளாச்சிமடாவில் தனக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை, கேரள அரசுக்கு திருப்பித் தர முன்வந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால்,விவசாயிகளின் தலைமையில் விரைவில் தொடங்கப்படவுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு தொடங்கப்பட உள்ளது. அதற்கு தான் இந்த நிலத்தை கோகோ கோலா நிறுவனம் தர முன் வந்துள்ளது.
1892 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கோகோ கோலா நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,800 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்றுவருகிறது. குறிப்பாக இந்த கோகோ கோலோ நிறுவனம் குளிர்பான விற்பனையில் கொடிக்கட்டி பறக்கிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் கோகோ கோலோ நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன.

இந்நிலையில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பிளாச்சிமடாவில் கோகோ கோலோ நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஆனால் கோலா நிறுவனம் நிலத்தடி நீரை சுரண்டுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும், உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதை தொடர்ந்து மார்ச் 2004ல் பிளாச்சிமடாவில் உள்ள அதன் யூனிட்டை கோகோ கோலா நிறுவனம் மூடியது.
இந்த சூழலில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான பிளாச்சிமடா இடத்தை உழவர்களுக்கான கேட்டு கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. விவசாயிகளின் தலைமையில் விரைவில் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஆளும் இடது முன்னணி அரசு சார்பில் கேரள மின்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பிளாச்சிமடாவில் தனக்கு சொந்தமான நிலத்தை அரசுக்கு வழங்கும் முடிவை கோகோ கோலா நிறுவனம் எடுத்திருக்கிறது. மேலும், பாலக்காடு பகுதியில் விவசாயிகளுக்கு மாதிரி பண்ணை அமைப்பதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்கவும் கோலா நிறுவனம் முன்வந்தது.

இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜுவான் பாப்லோ ரோட்ரிக்ஸ் ட்ரோவாடோ, 35 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடத்தை அரசுக்கு ஒப்படைக்கும் நிறுவனத்தின் முடிவைத் தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications