லோக்சபா தேர்தல் முடிவு வெளியான நாளில் ப. சிதம்பரம் ஏன் அப்படி செய்தார்?: பாஜக கேள்வி
Recommended Video

டெல்லி: 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்று 7 தனியார் நிறுவனங்களுக்கு தங்கம் இறக்குமதி சலுகை அளித்தார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்று பாஜக சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிபிஐ அதிகாரிகளால் கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது. சிக்கலில் உள்ள பணத்தின் உண்மையான மதிப்பை வங்கிகளின் பதிவேடுகளில் பதியாமல் பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது.
அவர்களின் கடந்த 6 ஆண்டு கால ஆட்சியில் வங்கிகள் கொடுத்த முன்பணம் ரூ. 52 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.(அது 2008ம் ஆண்டில் ரூ. 18.06 லட்சம் கோடியாக இருந்தது.) அதில் 36 சதவீதம் மட்டுமே சிக்கலில் உள்ள சொத்துகளாக பதிவு செய்யப்பட்டது.
பொருளாதார மேதைகள் என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆட்சி செய்த காலத்தில் தலையீடுகள், பிரஷரால் வங்கி முறை சீர்குலைந்துவிட்டது.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்று 80: 20 தங்கம் இறக்குமதி திட்டத்தின் கீழ் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்பட 7 தனியார் நிறுவனங்களுக்கு சிதம்பரம் சலுகை அளித்துள்ளார். அதற்கு என்ன அர்த்தம்.
இது குறித்து சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். இது ஊழல் இல்லையா? எந்த ஊழல்வாதியையும் பாஜக அரசு சும்மா விடாது என்றார்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்!










Click it and Unblock the Notifications