Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உள்ளாடை".. மொட்டை மாடியில் "கண்றாவி".. அந்த ஜாக்கெட் வேற.. கிட்ட போய் பார்த்து அலறிய பெண்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த சம்பவம், வீடியோவாக வெளிவந்த நிலையில், இன்னொரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.. இந்த வீடியோவை பார்த்த பலரும், தலையில் அடித்து கொண்டு போகிறார்கள்.. என்னவாம்?

சமீபத்தில் கர்நாடகா மாநிலம், பெங்களூரு லாகேரே அருகே ஒரு சம்பவம் நடந்துஅதிர்ச்சியை கிளப்பியிருந்தது.. அதாவது, அங்குள்ள விதான் செளதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல் போய்விடுமாம்.

உள்ளாடைகள்: மொட்டை மாடிகளில் துணிகளை காயப்போட்டுவிட்டு போனால், அவை திருடு போயுள்ளது.. எல்லா துணிகளும் அங்கு இருக்கும்போது, கரெக்ட்டாக உள்ளாடைகள் மட்டும் மிஸ் ஆகிவிடுமாம்.

Why did Gujarat man do this and what happened in bangalore Raj Gopal Nagar

இதற்கு பிறகு, ஆளில்லாத வீடுகளிலும் பெண்களின் உள்ளாடைகள், ஜாக்கெட்டுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் குவிந்தன.. அதிலும் ராஜகோபால்நகர் போலீஸ் ஸ்டேஷனில் இதுதொடர்பான புகார்கள் மட்டும் அதிகமாக வந்தது.. இதனால், சம்பந்தப்பட்ட நபர், அந்த பகதியில்தான் இருக்கக்கூடும் என்பதால், விதான் சௌதா பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர். எங்கெல்லாம் திருடு போனதாக புகார் வந்ததோ, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

ரகசிய செயல்: அப்போதுதான், அந்த சபலிஸ்ட் சிக்கினார்.. ஒரு வீட்டிற்குள் நுழைந்து உள்ளாடைகளை திருடும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது.. திருடுவதுடன் மட்டுமல்லாமல், ரகசியமாக மொட்டை மாடிக்குச்சென்று, அந்த உள்ளாடைகளை வைத்து அநாகரீக செயலில் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, பெண்கள் குளிப்பதையும் ரகசியமாக வீடியோ எடுப்பதும் பதிவாகி உள்ளது.

போலீசார் இவரை பற்றி சொல்லும்போது, "இந்த நபர் ஆண்கள் இல்லாத வீட்டுக்குள்தான் நுழைவார்.. யாருமில்லாத வீடுகளுக்குள் நுழைந்து, நேராக டாய்லெட்டில் தான் அதிக நேரம் செலவிடுவார்.. பிறகு அழுக்கு துணிகள் எங்கிருக்கின்றன என்று தேடுவார்.. பிறகு, துவைக்கப்பட்ட துணிகள் வைக்கப்பட்ட இடத்திற்கு செல்வான். அங்கே, பெண்களின் உள்ளாடைகளை மட்டும் தேடி எடுத்து கொள்வான். இதை வைத்து கேவலமான செயல்களை செய்வான்" என்றனர்.

அடையாளம்: அதாவது, அந்த சைக்கோ பெண்ணின் உள்ளாடையை எடுத்துக்கொண்டு, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு அதற்கு பிறகு சுய இன்பம் செய்து கொள்வதாக கூறுகிறார்கள்.. இந்த நபர் யார் என்று போலீசார் அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், இன்னமும் அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், குஜராத்தில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள தந்துகா நகரில் அப்பார்ட்மென்ட்டிலும் இதே பிரச்சனை இருந்திருக்கிறது. அதாவது, அவரது உள்ளாடைகளை துவைத்து காயப்போட்டால், அந்த உள்ளாடைகள் வீட்டுக்கு திரும்புவதில்லையாம்.. காயப்போட்ட கொஞ்ச நேரத்திலேயே அவை காணாமல் போய்விடுகிறதாம். இது பல மாதங்களாக நடந்து வருகிறதாம்.

சிக்கிய வீடியோ: 8 மாதம் ஆன நிலையில்தான், இப்படி ஒரு திருட்டு நடப்பதை அந்த பெண் கண்டுபிடித்துள்ளார்.. ஆனால் யார் திருடுகிறார்கள் என்று மட்டும் தெரியவில்லை.. அதனால், அந்த "உள்ளாடை கள்வன்" யார் என்பதை, தானே நேரடியாக கண்டுபிடிக்க களமிறங்கினார்..

இதற்காக தன்னுடைய செல்போனை ஏரோபிளேன் மோடில் வைத்துவிட்டு, கேமராவை ஆன் செய்தார்.. வழக்கம்போல் மொட்டை மாடியில் உள்ளாடைகள் காய வைக்கும் இடத்துக்கு நேராக, அந்த கேமராவை செட் செய்துவிட்டார்.. செல்போனை யாருக்கும் தெரியாமலும் மறைத்து வைத்துவிட்டார்..

செல்போன்: பிறகு, சிறிது நேரம் கழித்து மொட்டை மாடிக்கு போனார்.. எதிர்பார்த்தபடியே, அன்றைய தினமும் உள்ளாடைகள் காணாமல் போயிருந்தது.. இதனால், அந்த திருடன் யார் என்பதை பார்க்க, மறைத்து வைத்த செல்போனை தேடி ஓடினார்..

அதிலுள்ள கேமராவை பார்த்தபோதுதான், ஒருநபர், மொட்டை மாடிக்கு வந்து உள்ளாடையை திருடி செல்வது பதிவாகியிருந்தது.. அவர் பார்ப்பதற்கு அச்சு அசல், அவரது பக்கத்து வீட்டுக்காரர் போலவே இருந்தாராம். அடுத்த நிமிஷமே, "கோவை சரளாவாக" உருவெடுத்தார் அந்த பெண்.. 8 மாதமாக உள்ளாடைகளை திருடி வந்த அந்த பக்கத்து வீட்டுக்காரை அசிங்க அசிங்கமாக திட்டினார்..

ஆனால், அந்த பக்கத்து வீட்டுக்காருக்கும் சப்போர்ட்டுக்கு சிலர் திரண்டு வந்தனர்.. இந்த பெண், வீடியோவை காட்டியும் அவர்கள் யாருமே நம்பவில்லை.. "அவன் நானல்ல" என்று சாதித்தார் பக்கத்து வீட்டுக்காரர். ஒருகட்டத்தில், இந்த பெண்ணுக்கு சார்பாகவும், பக்கத்து வீட்டு நபருக்கு சார்பாகவும் ஆட்கள் திரண்டு திரண்டு வந்தார்கள்..

வாய்த்தகராறுகள் வெடித்தன.. அடுத்து கைகலப்பு ஸ்டார்ட் ஆனது.. கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஒருவர் மீது ஒருவர் தாறுமாறாக வீசியும், தாக்கியும் கொண்டார்கள்..

அசிங்கம்: அதற்குள் அந்த பகுதி மக்கள் விஷயத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்கள்.. போலீசுக்கு விஷயம் தெரிந்து வருவதற்குள், அந்த அப்பார்ட்மென்டே ரணகளமாகிவிட்டது. அதற்குள் பலரது மண்டைகள் உடைந்திருந்தன... 10-க்கு மேற்பட்டோருக்கு உடம்பெல்லாம் ரத்தம் வழிந்து.. அத்தனை பேரும் மருத்துவமனையில் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இருதரப்பையும் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்து ஜெயிலிலும் வைத்துள்ளார்கள்..

நாட்டிலே இருக்கிற பிரச்சனையெல்லாம் விட்டுட்டு, உள்ளாடை விஷயத்துக்காக, இருக்கிற வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு, ஒன்று திரண்டு வந்து சண்டையை போட்டுள்ளார்கள்.. மண்டைகளும் உடைந்து, ஆஸ்பத்திரியில் எல்லாரும் இப்போது அட்மிட் ஆகியிருக்கிறார்கள்.. அந்த வீடியோவில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், உள்ளாடைகளை திருடுவதற்கு, உசுர பணயம் வைத்துக்கொண்டு, மொட்டை மாடியில் ஏறி வந்தாராம் அந்த நபர்.. அட ஆண்டவா..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+