வாடகை வீடு.. "முஸ்லிம்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது".. சொன்னது யார் பாருங்க.. போலீஸ் அதிரடி.. சபாஷ்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் திடீர் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.. எனினும், போலீசார் உடனடியாக வந்து நிலைமையை சீர்செய்ததால், பதற்றம் எதுவும் நடக்காமல் தடுக்கப்பட்டுவிட்டது.
தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே, தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டதாக பெங்களூரை சேர்ந்த ஹைஃபா என்ற இளம்பெண், 2 வருடங்களுக்கு முன்பு ட்விட்டரில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
பெங்களூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார் ஹைஃபா... எத்தனையோ புரோக்கர்களை தொடர்பு கொண்டு, வீடு வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அதில் ஒரு புரோக்கர் நம்பரின் வாட்ஸ்அப் நம்பரை பெற்று வாடகைக்கு வீடு ஒன்று இருக்கிறதா என்று கேட்டுள்ளார்..

ட்வீட்: உடனே புரோக்கர், "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு இவர் "ஹைஃபா" என்று சொல்லவும், "நீங்கள் இந்துவா?" என புரோக்கர் கேட்டுள்ளார்..
உடனே அதனை மறுத்த ஹைஃபா,.. "இல்லை, நான் இந்து இல்லை.. அதில் ஏதேனும் உங்களுக்கு பிரச்சனையா?" என்று திருப்பி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த புரோக்கர், "வீடு என்னமோ காலியாகத்தான் இருக்கு.. ஆனால் அதன் ஓனர், இந்து குடும்பத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்" என்று சொன்னாராம் ..

வாடகைக்கு வீடு: தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே, தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டது என்று ஹைஃபா தன்னுடைய ட்விட்டரில் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.. இந்த பதிவை எப்போது பதிவிட்டார் தெரியுமா? இந்த நாட்டின் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த, ஆகஸ்ட் 15-ம் தேதி பதிவிட்டிருந்தார்.
ஹைஃபா பதிவிட்டிருந்த அந்த ட்வீட், மிகப்பெரிய விவாதப்பொருளாக அன்று மாறியிருந்தது.. இணையவாசிகள் திரண்டு வந்து ஹைஃபாவுக்கு ஆறுதல் சொன்னார்கள்..
இந்தியர்கள்: "எல்லாரும் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றி வைத்து என்ன பலன்? இந்த கொடி நம் அனைவரையும் இந்தியர்களாக கம்பீரம் கொள்ள செய்கிறது என்பதைதானே உணர வேண்டும்? நீங்கள் இப்படிப்பட்ட செயலுக்கு ஆளாக நேரிட்டதற்கு வருந்துகிறோம்.. இந்த கடினமான சம்பவத்தை நீங்கள் கடந்து செல்லுங்கள்" என்று ஹைஃபாவுக்கு ஆறுதல் தந்தார்கள்.
ஆனால், மேலும் சிலரோ, "வீட்டு ஓனர்கள் அவர்களது, சம்பிரதாயங்களை, விருப்பங்களை சொல்கிறார்கள், இதில் ஒன்றும் தவறில்லையே? நமக்கு பிடிக்காவிட்டால், விலகிவிட வேண்டியதுதானே" என்று மாற்றுக்கருத்தையும் முன்வைத்திருந்தனர்.

இணையவாசிகள்: எனினும் பெரும்பாலான இணையவாசிகள், "இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.. அதற்கான புதிய தொடக்கத்தை உடனடியாக தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தனர். 2 வருடங்கள் முன்பு இந்த ட்வீட்டும், அதன்மூலம் நடந்த விவாதங்க்ளும் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தன.
எனினும், இதே நிலைமைதான் இன்றும் சில இடங்களில் நீடிப்பதாக தெரிகிறது. இதோ ஜெய்ப்பூரில் நடந்த சம்பவம், லேசான பரபரப்பை தந்துவிட்டது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நந்தபுரி காலணி உள்ளது.. இங்குள்ள பல வீடுகளுக்கு வெளியே முஸ்லிம்களுக்கு சொத்துக்களை வாடகைக்கு விடவோ அல்லது விற்கவோ கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்டன.. முஸ்லிம் ஜிஹாத்துக்களுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று பட வேண்டும் என்ற அந்த போஸ்டர்கள், அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது.
நந்தபுரி காலனி அமைந்துள்ள 22வது வார்டு பாஜக கவுன்சிலர் அனிதா ஜெயின் தூண்டுதலால், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக கூறப்பட்டது. . "இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அனிதாவும் தெரித்துள்ளார்.
போஸ்டர்கள்: இப்படி ஒரு போஸ்டர் ஒட்டியதுமே, அந்த பகுதியிலிருந்த முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.. அதற்குள் தகவலறிந்து வந்த போலீசார், அவர்களது வீட்டுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை உடனடியாக அகற்றினார்கள்..
மேலும், அந்த பகுதியில் அமைதி மற்றும் அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்திவிட்டு சென்றார்கள். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications