ஷீனாவின் கொலை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 'அவருக்கு' ஏன் 3 ஆண்டுகள் ஆனது?
மும்பை: இந்திராணி முகர்ஜி மிரட்டியதால் தான் ஷீனா மாயம் ஆனது பற்றி அவரது நெருங்கிய தோழி போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கு குறித்து அண்மையில் போலீசாருக்கு யாரோ போன் மூலம் தகவல் தெரிவித்த பிறகே அவர்கள் விசாரணையை துவங்கி உண்மையை கண்டுபிடித்தனர். போலீசாருக்கு ஷீனாவின் தாய் இந்திராணி மற்றும் அவருடைய தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜிக்கு தெரிந்த ஒருவர் தான் தகவல் கொடுத்ததாக கூறப்பட்டது.
உண்மையில் ஷீனாவின் நெருங்கிய தோழியின் கணவர் தான் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஷீனா
கவுஹாத்தியில் ஷீனாவுடன் சேர்ந்து பள்ளியில் படித்த தோழியின் கணவர் ராணுவத்தில் உள்ளார். அவர் தான் மும்பை போலீசாருக்கு போன் செய்து ஷீனாவின் கொலை பற்றி தெரிவித்துள்ளார். அவருக்கு எப்படி கொலை பற்றி தெரியும், தெரிந்திருந்தும் அவர் ஏன் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்தார் என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்திராணி
ஷீனாவை பார்க்க அந்த தோழியும், அவரது கணவரும் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை வந்துள்ளனர். (ஷீனாவின் தோழியின் கணவர் தற்போது மீரட்டில் பணியாற்றுகிறார்.) அது தான் அவர்கள் ஷீனாவை கடைசியாக பார்த்தது. அதன் பிறகு அந்த தம்பதி இந்திராணியை அணுகி ஷீனா பற்றி கேட்டுள்ளனர். அதற்கு இந்திராணியோ அவர்களை மிரட்டியுள்ளார்.

ராகுல்
அந்த தம்பதி ஷீனாவின் காதலர் ராகுல் முகர்ஜியிடம் கூட ஷீனா பற்றி கேட்டுள்ளனர். ஷீனாவை ராகுல் பின்தொடர்வதாக இந்திராணி போலீசில் புகார் அளித்ததால் அவர் அந்த தம்பதி கேட்டதை கண்டுகொள்ளவில்லை.

ரகசியம்
போலீசாருக்கு தகவல் தெரிவித்த தம்பதிக்கு ஷீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நிறைய விஷயம் தெரியும் என்று தற்போது மும்பையில் வசித்து வரும் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications