"ஜூலி"யின் திருவிளையாடல்.. விடிகாலையில் கண்ணெதிரே பார்த்த மகன்.. தலை வேறு.. உடம்பு வேறு.. என்னாச்சு?
தாயின் கள்ளக்காதலை கண்டித்த மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்
ஜெய்ப்பூர்: 19 வயது மகனை வீட்டில் வைத்து கொண்டு ஜூலி போட்ட ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.. இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்..!
கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட சம்பவங்கள் பல பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் பெரும்பாலான உயிர்பலிகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே நடந்து வருவது வேதனை தருகிறது.
இந்த கள்ளக்காதலுக்கு பிஞ்சு குழந்தைகளை பெற்ற தாய்களே கொல்வது அதைவிட கொடுமையாக இருக்கிறது.. இப்போது மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை வடமாநிலத்தில் நடந்துள்ளது.

கணவர்
பீகார் மாநிலம் பாட்னாவில் திதர்கஞ்ச், தர்ம்ஷாலாகாலியை சேர்ந்தவர் ஜூலி தேவி.. இவரது மகன் சூரஜ்.. 19 வயதாகிறது.. ஜூலி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார்.. இப்போது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.. இவரது வீட்டில் தர்மேந்திர குமார் என்ற இளைஞர் வாடகைக்கு வந்தார்.. ஜூலியின் அழகு, தர்மேந்திர குமாரை ஈர்த்தது.. கணவரை பிரிந்து தனிமையில் வாழும் சூழல் இதற்கு வசதியாகி விட்டது..

வாடகைக்கு குடிவந்த இளைஞர்
அதுபோலவே, இளைஞரை ஜூலிக்கும் பிடித்துவிட்டது.. இருவரும் நெருக்கமாகினர்.. கள்ளக்காதல் தாண்டவமாடியது. மகன் சூரஜ் வீட்டில் இல்லை என்றால் போதும், இருவருக்குமே குஷிதான்.. இந்நிலையில், தன்னுடைய அம்மாவின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பது மகனுக்கு தெரியவந்தது.. இதனால், அம்மாவின் செயல்களை கண்காணிக்க ஆரம்பித்தார்.. அப்போதுதான், தர்மேந்திர குமாருடன், அம்மாவின் கள்ள உறவு இருப்பது தெரிந்து அதிர்ந்து போனார் மகன்.. இதை ஒருநாள் கண்ணெதிரிலேயே மகன் பார்த்துவிட்டார்..

கொடூர கொலை
இதனால் அம்மா மீது கோபம் வந்தது.. உரிமையாய் கண்டித்தார்.. அந்த இளைஞரை வீட்டை விட்டு வெளியேற்றுமாறும் அம்மாவிடம் சொன்னார்.. அதேபோல, இளைஞரிடம் சென்று, தன் அம்மாவை விட்டுவிடுமாறு கெஞ்சினார்.. ஆனால், இந்த கள்ள ஜோடி, சூரஜ் பேச்சை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மகன், தர்மேந்திர குமாருடன் நேரடியாகவே மோதிவிட்டார்.. அப்போதும் தர்மேந்திர குமார் தன்னை திருத்தி கொள்ளவில்லை..

ஜூலி பிளான்
இதனால் மனம் வெறுப்படைந்த சூரஜ், தன்னுடைய பாட்டி வீட்டுக்கு போய்விட்டார்... கோபித்து கொண்டு போன மகனை, ஜூலி சமாதானப்படுத்தவே இல்லை.. மறுபடியும் வீட்டுக்கு கூப்பிடவும் இல்லை. இந்நிலையில், மே 22 ம் தேதி இரவு, ரோட்டில் சூரஜ் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தர்மேந்திர குமார், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சூரஜ்ஜை அடித்து கொன்றுவிட்டனர்.

தண்டவாளம்
பிறகு, உடலை உடல் வேறு, தலை வேறாக வெட்டினார்கள்.. உடலை எடுத்துகொண்டுபோய், ரயில் தண்டவாளத்தில் வீசினர்.. தலையை கொண்டு போய் குழி தோண்டி புதைத்துவிட்டனர்.. இதெல்லாம் இரவோடு இரவாக நடந்து முடிந்துவிட்டது.. விடிகாலை, தண்டவாளத்தில் தலையில்லா உடம்பை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. ரயில்வே போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்...

விசாரணை
அப்போது போலீசுக்கு வந்த முதல் டவுட்டே ஜூலி மீதுதான்.. அவரை பிடித்து விசாரித்ததில் கள்ளக்காதல் விவகாரமும், அதற்கு மகன் எதிர்ப்பு தெரிவித்ததும், தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, மகனை கொல்ல ஐடியா தந்ததே ஜூலிதான் என்றும், தான் சொன்னதாலேயே கள்ளக்காதலன் மகனை அடித்து கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ஜூலி தேவியின் கள்ளக்காதலன் தர்மேந்திர குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications