"அசைன்மென்ட்" கொடுத்து தினகரனை வெளியில் விட்டுள்ளார்களாமே.. பரபர தகவல்கள்!
டெல்லி: ஒரு முக்கியமான வேலை தொடர்பாகவே பாஜகவின் ஆசியால் தினகரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
தினகரனை வெளியில் கொண்டு வருவதற்கு வசதியாகவே மத்திய அரசு தன் வசம் உள்ள டெல்லி போலீஸ் மூலமாக தினகரனுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியதாகவும் பேச்சு அடிபடுகிறது.
எனவே தானாக தினகரனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மாறாக பாஜகவின் ஆசியால்தான் அவருக்கு ஜாமீன் கிடைத்ததாக சொல்கிறார்கள். இதற்குக் காரணமும் சொல்கிறார்கள்.
டெல்லி போலீஸின் கில்லாடித்தனம்
தினகரன் மீது டெல்லி போலீஸ் வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்படியான ஆதாரங்கள் எதையும் சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தாக்கல் செய்யவில்லை. குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
வேண்டும் என்றே
இந்த சூழலில், தொடர்ந்து ஜாமீன் மறுப்பதற்கு முகாந்திரம் இல்லை என கோர்ட் கருதியதால் தினகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பாஜக ஆதரவால்தான்
பா.ஜ.க. வின் ஆதரவில் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஒரு "அசைன்மெண்ட்" பா.ஜ.க.மேலிடத்தால் தினகரனுக்கு தரப்பட்டுள்ளதாம். அதன் பொருட்டே அவர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார் என்கிறது பா.ஜ.க.வட்டாரம்.
அது என்ன வேலை
அது என்ன அசைன்மென்ட் என கமலாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்க்கான அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை முழுமையாக பெறுவதில் சிக்கல் இருக்கிறது.
எடப்பாடி அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்
எடப்பாடியால் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. சசிகலா அல்லது தினகரன் இருவரில் ஒருவரால் மட்டுமே அதிமுக எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்த முடியும்.
சசிகலா கஷ்டம்.. தினகரன் ஈஸி
சசிகலா விஷயத்தில் சட்டச்சிக்கல் இருக்கிறது. தினகரனுக்கு அந்த பிரச்சனை இல்லை. அதனால் அவர் மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஒருமுகப்படுத்தும் அசைன்மென்ட்டடை கொடுத்து, அவரை ஜாமீனில் வெளியே விடலாம் என முடிவு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவரும் அதற்கு சம்மதித்துள்ளதன் அடிப்படையில் தான் ரிலீஸாகியிருக்கிறாராம்.
ஆனால் என்ன செய்யப் போகிறாரோ
இதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்கிறார்கள். ஆனால், வெளியே வந்துள்ள தினகரன், பா.ஜ.க.வை ஆதரிப்பாரா? அல்லது எதிர்ப்பாரா? என்பது போகப் போகத் தெரியும்.