இந்தியன் ஏர்லைன்ஸால் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போன குஷ்பு
மும்பை: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று காலை மும்பையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானத்தின் புறப்பாடு நேரத்தை மாற்றியதால் குஷ்புவால் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
நடிகை குஷ்பு மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கோலிவுட் படங்களில் நடிக்க வந்தவர் இயக்குனர் சுந்தர்.சி.யை திருமணம் செய்து தமிழ்நாட்டு மருமகளாகி சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் அவர் ஆண்டுதோறும் மும்பைக்கு சென்று ஒரு வாரம் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி இந்த ஆண்டும் அவர் மும்பைக்கு சென்றார். அவரது குடும்பத்தில் திருமண நிகழ்ச்சி வேறு நடந்ததால் குஷ்பு மகிழ்ச்சியில் இருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் குஷ்புவால் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
I miss my @TN_PCC executive meeting dis mrng, thanks 2 @indianairlines resheduling of its mrng flight..Now I wait 4 media 2 cook stories 😊😊
— khushbusundar (@khushsundar) June 3, 2015
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று காலை நான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் புறப்பாடு நேரத்தை மாற்றியதால் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. மீடியா இது குறித்து எழுதும் கதைகளுக்ககாக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.