ரயில் பெட்டிக்குள் நசுங்கிய பயணிகள்.. வெட்டி எடுத்து மீட்பு! பணியில் தாமதம் இதனால்தான்.. ஷாக் தகவல்!
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே நடைபெற்ற ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 ரயில்களின் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று கிடப்பதால், மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், இரவு 7.20 மணியளவில் ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர்.

அதோடு சற்று நேரத்தில் அந்த வழியில் வந்த மற்றொரு ரயிலும் தடம்புரண்ட ரயில் மீது மோதியுள்ளது. பெங்களூரின் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அங்கு வந்தபோது உடனடியாக ரயிலை நிறுத்த முடியாமல் மோதியதால், அந்த ரயிலின் 3-4 பெட்டிகளும் தடம் புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 2 பயணிகள் ரயிலும், 1 சரக்கு ரயிலும் ஒன்றுடன் ஒன்று ஏறி நசுக்கி இருப்பதால், உயிரிழப்பு மற்றும் படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி நசுங்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காட்டுப்பகுதியில் அதுவும் இரவு நேரத்தில் இந்த ரயில் தடம்புரண்டு விபத்து நடந்திருப்பதால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரயில் பெட்டிகள் நசுங்கி இருப்பதால் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எனக் கூறப்படுகிறது.
3 ரயில்கள் மோதி தடம்புரண்டு கிடப்பதால், உள்ளே சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால் ரயில் பெட்டிகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயில் பெட்டிகளை வெட்டி எடுத்து, உள்ளே சிக்கியவர்களை மீட்க வேண்டியுள்ளதால், மீட்புப் பணிகள் தாமதம் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications