உங்களுக்கு 'டபுள் கொட்டு'தான்.. ராகுலிடம் தைரியமாகச் சொன்ன 3 பேர்..!
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஒரு மூன்று பேருக்கு உடனே போன் போட்டு அவர்களுக்கு நன்றி சொன்னாராம் ராகுல் காந்தி.
எதற்காக இந்த நன்றி தெரியுமா.. உங்களது கட்சிக்கு இந்த முறை வெறும் இரட்டை இலக்கத்தில்தான் சீட் கிடைக்கும் என்று சொன்னதற்காக.
இப்படி ராகுலிடம் திட்டவட்டமாக, தைரியமாக சொன்ன அந்த மூன்று பேரும் மத்திய அரசின் ரகசியப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களாம்.

வரலாறு காணாத தோல்வி
இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளது. யாருமே எதிர்பார்க்காத அடியை கொடுத்துள்ளனர் மக்கள்.

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அவலம்
அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட லோக்சபாவில் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. அப்படி ஒரு அடியைக் கொடுத்துவிட்டனர் மக்கள்.

அன்றே சொன்ன அதிகாரிகள்
தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியிடம், ரகசிய புலனாய்வு மற்றும் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள், ராகுலுக்காக நாடு முழுவதும் வாக்காளர்களின் மன நிலையை மோப்பம் பிடித்துச் சொல்லியுள்ளனர்.

இரட்டை இலக்கம்தான்
அவர்கள் ராகுலிடம், உங்களது கட்சி பெரும் தோல்வியைத் தழுவும், இரட்டை இலக்கத்தில்தான் சீட் கிடைக்கும் என்று தெளிவாகச் சொல்லி விட்டார்களாம். இதனால் ராகுல் அப்போதே கிலியடைந்து விட்டாராம். இருப்பினும் நம்பிக்கையுடன் இருந்து வந்தாராம்.

சொன்னபடி நடந்தது
ஆனால் அந்த அதிகாரிகள் சொன்னபடி நடந்ததால் ஆச்சரியப்பட்டுப் போன ராகுல் காந்தி, வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அவர்களுக்குப் போன் போட்டாராம். உண்மையைச் சொன்ன உங்களுக்கு நன்றி. வரும் ஆட்சியாளர்களிடமும் இதேபோல நேரமையாக செயல்படுங்கள் என்று அவர்களை மனதாரப் பாராட்டினாராம்.
நேர்மையானவர்தான் ராகுல்...
-
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications