சபரிமலை கோவில் விவகாரத்தில் கேரளா அரசு தலையிடாது- உம்மன்சாண்டி
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது என்று கேரளா மாநில உம்மன் சாண்டி விளக்கம் தெரிவித்து உள்ளார். மாநில அரசு தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை உள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ‘யங் இந்தியா' வக்கீல்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், ‘ஹேப்பி டூ பிளீட்' என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளது.
இதுபற்றிய விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது தன்னார்வ தொண்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் பாரம்பரியம், நம்பிக்கை என்ற பெயரில் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

இது அரசியல் சாசனம் வகுத்த கொள்கைகளுக்கு எதிரானது. எனவே இந்த சமூக கொடுமையை நீக்கவேண்டும் என்று வாதிட்டார். பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக் காட்டிய அவர், கோவில் போன்ற பொதுவான வழிபாட்டுத் தளங்களில் பெண்கள் நுழைவதை தடுப்பது தங்களுடைய உரிமை என்று கோவில் நிர்வாகம் கூற முடியாது. பாலின பாகுபாடின்றி அனைத்து கோவில்களிலும் வழிபட இந்துக்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாலின சமத்துவம் என்பது அரசியல் சாசனம் வழங்கிய உரிமை ஆகும். எனவே கோவில் நிர்வாகம், கோவிலுக்குள் பெண்கள் நுழைவது மத சம்பந்தமான விவகாரம் என்றும் அதில் தங்களுக்கு உரிமை உள்ளது எனவும் கூற இயலாது என்று குறிப்பிட்டனர். பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
உம்மன் சாண்டி விளக்கம்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்து உள்ள கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது என்று கூறிஉள்ளார். "மத நம்பிக்கைகள், பாரம்பரிய வழக்கங்களில் கேரள அரசு தலையிடாது. பெண்கள் அனுமதி விவகாரத்தில் சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுப்பதே சரியானது என்றார். மாநில அரசு தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்துவிட்டது என்றும் உம்மன் சாண்டி கூறிஉள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications