தினசரி புதிய உச்சம் தொடும் பெட்ரோல், டீசல் விலை... ஜிஎஸ்டியில் சேர்க்கும் அறிவிப்பு வருமா?
பெட்ரோல், டீசல் விலை தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னை : பெட்ரோல், டீசல் விலை தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் உயர்ந்து ரூ. 75.77க்கும், டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 67.62க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசுகளின் வாட் வரிக்கு முடிவு கட்டும் விதமாக ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை சேர்க்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்துவரும் நிலையில், இன்றும் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சென்னையில் இன்று பெட்ரோலின் விலை 14 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ. 75.77 ஆகவும், டீசலின் விலையில் 12 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 67.62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் மக்களிடையே விலை உயர்வை திணிக்கின்றன. மத்திய அரசு தனது பங்கிற்கு கலால் வரியை குறைத்தும் பெட்ரோலியப் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியை குறைக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் வரி வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் விடாப்பிடியாக உள்ளன. இதனால் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர். எனினும் கடைசியாக நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மக்களின் சுமையை குறைக்க ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வர வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் நிதித்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications