9ம் தேதி கர்நாடகாவின் பலத்தை காட்டுகிறோம்: வாட்டாள் நாகராஜ்
பெங்களூர்: கர்நாடகாவின் பலம் என்னவென்பதை காட்டப் போவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகளை எரித்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.

தண்ணீர் திறப்பு
கர்நாடக அரசு நேற்று இரவு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்த பிறகு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளது. தண்ணீரை திறந்துவிட 3 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பந்த்
காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் இது குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தண்ணீர் இல்லை
காவிரி நதியில் உள்ள அணைகளில் போதிய அளவு நீர் இல்லை. இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரி அல்ல என்றார் நாகராஜ்.

காட்டுகிறோம்
கர்நாடகாவின் பலம் என்னவென்பதை காட்டுகிறோம். இதற்காக வரும் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறோம். மாநிலத்தின் உரிமையை காக்க நடத்தப்படும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று நாகராஜ் தெரிவித்தார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications