Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்குவோம், ஜாக்கிரதை.." பரபரப்பைக் கிளப்பிய பாஜக எம்பி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களையும் அடித்து நொறுக்குவோம் என பாஜக எம்பி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பாஜக கடுமையாக முயன்றது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்களும் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் 3ஆவது முறையாக அங்கு வென்று ஆட்சியை அமைத்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றார்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அங்குப் பெரியளவில் கலவரம் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டு நடத்திய இந்த கலவரத்தில் பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டதாக பாஜக சாடியது. இந்தச் சூழலில் மேற்கு வங்கத்தில் உள்ள 108 நகராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து திரிணாமு் மற்றும் பாஜக தலைவர்கள் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சரச்சை பேச்சு

சரச்சை பேச்சு

அதன்படி பராக்பூரின் பாஜக எம்பியான அர்ஜுன் சிங், நேற்று தனது சொந்தப் பகுதியான பட்பராவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் கட்சியினர் பூத்களை கைப்பற்ற முடிந்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம். வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயலும் திரிணாமுல் கட்சியினர் மீது தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் அடித்து நொறுக்குவோம்" என்று அவர் தெரிவித்தார்.

பாஜக குற்றச்சாட்டு

பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளில் பொதுமக்கள் வாக்களிப்பதைத் தடுத்தால், பாஜக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், மே. வங்கத்தில் போலீசுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் அவர் விமர்சித்து இருந்தார்.

மத்திய படைகள்

மத்திய படைகள்

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த மத்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது இது தொடர்பான பல மனுக்கள் அவர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கும் பாஜக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+