புது 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க 7 மாதமாகுமாம்.... போட்டுடைக்கும் ப. சிதம்பரம்
புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க இன்னும் 7 மாதமாகும் என்கிறார் ப.சிதம்பரம்
டெல்லி: புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க மொத்தம் 7 மாத காலமாகும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசு மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது. தற்போது மத்திய அரசு மொத்தம் 2100 கோடி ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது.

ஆனால் இந்தியாவில் மொத்தமே ஒரு மாதத்துக்கு 300 கோடி ரூபாய் நோட்டுகளை மட்டுமே அச்சடிக்க முடியும். அதே நேரத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகள் என அறிவிக்கப்பட்டிருப்பவை இதைப் போல 7 மடங்கு அதிகமானவை.
ஆகையால் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க இன்னும் 7 மாதங்கள் எடுக்கும் என்பதுதான் யதார்த்தம்.
தற்போது புதிய ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இந்த ரூ2,000 மூலமாக நிலைமை முழுமையாக சீரடைய இன்னும் 5 அல்லது 6 மாதங்களாகும்.
சரி ரூ500, ரூ1,000 செல்லாது என அறிவித்தீர்களே? எதற்காக ரூ2,000 நோட்டுகளை அறிமுகம் செய்தீர்கள்? என்ற என் கேள்விக்கு எந்த ஒரு பதிலுமே இதுவரை கிடைக்கவில்லை.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications