திட்டக் குழுவுக்கு மாற்றான 'நிதி ஆயோக்' அமைப்பில் யார் யாருக்கு இடம்?
டெல்லி: திட்டக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு உருவாக்கியிருக்கும் 'நிதி ஆயோக்' அமைப்பில் 4 மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950-ம் ஆண்டு மத்திய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் திட்ட கமிஷன் உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் நேரு இதை உருவாக்கினார். மாநிலங்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீட்டை இந்த திட்ட கமிஷன் செய்து வருகிறது.
மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப 65 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையின்போது அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 7-ந் தேதி மாநில முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களைத் தவிர பிற கட்சிகளின் முதல்வர்கள் புதிய அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் திட்ட கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்படும் புதிய அமைப்பை மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்பெயர் ‘நிதி ஆயோக்'.
அதாவது ‘நேஷனல் இன்ஸ்டிடியூசன் ஃபார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா' ((National Institution for Transforming India) என்பதன் சுருக்கமே ‘நிதி' (NITI) ஆகும். இதனால் 'நிதி ஆயோக்' என்று மத்திய அரசு இதற்கு பெயரிட்டுள்ளது.
நிதி ஆயோக் என்பது என்ன?
- பிரதமர் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். இதில் ஒரு தலைமை செயல் அதிகாரியும், ஒரு துணைத்தலைவரும் இருப்பார்கள். இவர்களை பிரதமர் நியமிப்பார்.
- முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த 2 பேர், பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். சில முழு நேர உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள். இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
- இதில் 4 மத்திய அமைச்சர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
- இந்த புதிய அமைப்புக்குரிய ஆட்சி மன்ற குழுவில் அனைத்து மாநில முதல்வர்களும் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் இடம்பெறுவர்.
- பிராந்திய அளவிலான குழுக்களும் அமைக்கப்படும். இதில் பல்துறை வல்லுநர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெறுவர். இவர்களையும் பிரதமரே நியமிப்பார்.
-
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications