திட்டக் குழுவுக்கு மாற்றான 'நிதி ஆயோக்' அமைப்பில் யார் யாருக்கு இடம்?
டெல்லி: திட்டக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு உருவாக்கியிருக்கும் 'நிதி ஆயோக்' அமைப்பில் 4 மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950-ம் ஆண்டு மத்திய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் திட்ட கமிஷன் உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் நேரு இதை உருவாக்கினார். மாநிலங்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீட்டை இந்த திட்ட கமிஷன் செய்து வருகிறது.
மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப 65 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையின்போது அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 7-ந் தேதி மாநில முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களைத் தவிர பிற கட்சிகளின் முதல்வர்கள் புதிய அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் திட்ட கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்படும் புதிய அமைப்பை மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்பெயர் ‘நிதி ஆயோக்'.
அதாவது ‘நேஷனல் இன்ஸ்டிடியூசன் ஃபார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா' ((National Institution for Transforming India) என்பதன் சுருக்கமே ‘நிதி' (NITI) ஆகும். இதனால் 'நிதி ஆயோக்' என்று மத்திய அரசு இதற்கு பெயரிட்டுள்ளது.
நிதி ஆயோக் என்பது என்ன?
- பிரதமர் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். இதில் ஒரு தலைமை செயல் அதிகாரியும், ஒரு துணைத்தலைவரும் இருப்பார்கள். இவர்களை பிரதமர் நியமிப்பார்.
- முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த 2 பேர், பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். சில முழு நேர உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள். இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
- இதில் 4 மத்திய அமைச்சர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
- இந்த புதிய அமைப்புக்குரிய ஆட்சி மன்ற குழுவில் அனைத்து மாநில முதல்வர்களும் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் இடம்பெறுவர்.
- பிராந்திய அளவிலான குழுக்களும் அமைக்கப்படும். இதில் பல்துறை வல்லுநர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெறுவர். இவர்களையும் பிரதமரே நியமிப்பார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications