ஓய்வுக்கு பிறகு அப்துல் கலாம் வீட்டில் தங்கும் பிரணாப்... அரசு சார்பில் என்னென்ன வசதிகள்?
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி தங்குவதற்கு அப்துல் கலாம் வாழ்ந்த வீடு தயாராகி வருகிறது.
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஓய்வுக்கு பிறகு டெல்லி ராஜாஜி மார்க்கில் அப்துல் கலாம் தங்கியிருந்த வீட்டில்தான் தங்க போகிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார். தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்து வரும் 25-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.
இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 99 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது. இப்பதவிக்கு பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் நிறுத்தப்பட்டனர்.

வரும் 20-ல் வாக்கு எண்ணிக்கை
வரும் 20-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொள்கிறார்.

கலாமின் வீடு
முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் தனது ஓய்வுக்கு பிறகு நம்பர் 10, ராஜாஜி மார்க்கில் உள்ள வீட்டில் குடியேறினார். தற்போது அவர் காலமாகிவிட்டதை அடுத்து அந்த வீடு பிரணாப் முகர்ஜிக்கு ஒதுக்கப்படுகிறது. 11,776 சதுர அடி கொண்ட அந்த பங்களாவானது பிரணாப் முகர்ஜிக்காக தயாராகி வருகிறது.

புத்தகங்கள் படித்தே....
பிரணாப் முகர்ஜிக்கு புத்தகம் படிப்பதும் எழுதுவதும்தான் பொழுதுப்போக்கு. எனவே ஓய்வுக்கு பிறகும் அவர் அப்பணிகளில் மும்முரமாக ஈடுபட ஏதுவாக அவருக்காக
அவருடைய புத்தகங்களை அடுக்கி வைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. கடந்த 1951-ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கான ஊதியங்கள் சட்டத்தின் படி, ஒரு முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அனைத்து வசதிகளும் கொண்ட, வாடகை இல்லாத குடியிருப்பு வழங்குவது மரபு. அந்த குடியிருப்பில் அவர் வாழ்நாள் முழுவதும் தங்கிக் கொள்ளலாம்.

என்னென்ன வசதிகள்
அவருக்கென 2 தொலைபேசி இணைப்புகள் இருக்கும். அதில் ஒன்றை இணையதள பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய அளவில் ரோமிங்குடன் கூடிய மொபைல் போனும் வழங்கப்படும். கார் வசதி, இரு தனி செயலாளர்கள், இரு அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுவர். முன்னாள் குடியரசுத் தலைவருக்கு மருத்துவ வசதிகளும், இலவசமாக இந்தியா முழுவதும் செல்லவும், விமானத்தில் சொகுசு வகுப்பில் பயணமும் அளிக்கப்படும். இவருடன் ஒருவர் செல்லலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications