ஜல்லிக்கட்டு: எல்லோரும் ராஜினாமா செய்யுங்கள்.. விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மீது மத்திய அரசு கோபம்
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும், அல்லது, எல்லோரும் ராஜினாமா செய்யுங்கள் என்று, இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகளுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் எச்சரிக்கைவிடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விலங்குகள் நல வாரியம் என்பது, மத்திய அரசின்கீழ் இயங்கினாலும், தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். 22 உறுப்பினர்கல் கொண்ட அந்த வாரியத்தில் சிலர் மட்டுமே அரசு அதிகாரிகள், பெரும்பாலானோர் அதிகாரிகளல்லாதோராகும்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இவ்வாரியத்தின் தலைவர் டாக்டர்.ஆர்எம்.கர்ப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய கூடாது என்றும், அவ்வாறு செய்வதாக இருந்தால், ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் எச்சரித்ததாக கூறப்படுகிறது. வாரியத்தின் பல உறுப்பினர்களுக்கும், இதேபோன்ற தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக, உறுப்பினர்களில் சிலர் புகார் கூறியுள்ளதாக, ஆங்கில முன்னணி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரை அந்த நாளிதழ் தொடர்புகொண்டபோது, அவர் வடகிழக்கு மாநில சுற்றுப்பயணத்தில் இருப்பதாக தெரிவித்ததாகவும், சுப்ரீம்கோர்ட்டில் இப்படி ஒரு வழக்கு வந்தது தனக்கு தெரியாது என்றும், தனது அலுவலக அதிகாரி மிரட்டியிருக்க மாட்டார் என்றும், பதிலளித்துள்ளார்.
விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா உள்ளிட்டவை இணைந்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்துல்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications