உபியில் வரதட்சிணைக்காக பெண் போலீஸ் அடித்துக் கொலை - கணவன், குடும்பத்தினர் கைது

Subscribe to Oneindia Tamil

முசாபர்நகர்: உத்திர பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவர் வரதட்சிணைக் கொடுமையால் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் மாமனார், மாமியாரால் அவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கட்டவ்லி ஊரைச் சேர்ந்த அவர் பெயர் ரேணு. மீரட்டில் சொந்த கணவர், குடும்பத்தினராலேயே அவர் வரதட்சணைக்காக அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது தந்தை ஓம்பால் சிங் போலீசில் புகார் அளித்துள்ளார் என்று காவல்துறை அதிகாரி சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

கபில் குமார் என்னும் அவரது கணவர், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒரு சாப்ட்வேர் ஊழியர்.

கட்டவ்லி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ரேணு வேலை செய்து வந்துள்ளார். ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கபில் மற்றும் அவரது தந்தை விரேந்திரா, தாய் குசும் மற்றும் சகோதரர் விக்ராந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்காக ரேணுவின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+