மேற்கு வங்கத்தில் அரை நிர்வாண கோலத்தில் கிடந்த திருமணமான பெண்ணின் உடல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரை நிர்வாண கோலத்தில் கழுத்தில் ஆழமான காயத்துடன் பெண்ணின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு அரை நிர்வாண கோலத்தில் கழுத்தில் ஆழமான காயத்துடன் பெண்ணின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், பலாத்கார வழக்குப் பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானால் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications