உ.பி. தோழியை நண்பர்கள் 3 பேருக்கு விருந்தாக்கிய வாலிபர்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் 20 வயது பெண்ணை 3 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தாஹ்தோரா கிராமத்தைச் சேர்ந்த 20 பெண்ணுக்கு அவரது நண்பர் ஆகாஷ் செவ்வாய்க்கிழமை இரவு போன் செய்து ஒரு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். நண்பர் தானே அழைக்கிறார் என்று அந்த பெண்ணும் மூன்றாவது மாடியில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றார். ஆனால் ஆகாஷோ அவரை அங்கே விட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும் அவரது நண்பர்கள் 3 பேர் வீட்டுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கிராமத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. சலப் மாத்துர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணை பார்த்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.