ஹரியானாவில் வங்கிக்கு பணம் எடுக்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி
ஹரியானா மாநிலத்தில் வங்கிக்கு பணம் மாற்ற வந்த பெண் உயிரிழந்தார்.
கர்னல்: ஹரியானா மாநிலத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 8-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியானது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். இதனிடையே பணமாற்றம், ஏடிஎம் கியூ உள்ளிட்ட காரணங்கள் நாடுமுழுவதும் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் மூத்த குடிமக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் வழக்கம்போல் எந்த வங்கி கிளைக்கும் சென்று ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்து இருந்தது.
இதனிடையே ஹரியானா மாநிலம் கர்னல் நகரில் வங்கிக்கு பணம் மாற்ற வந்த பெண் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணம் எடுக்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கர்னல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணமாற்றத்தின் போது தொடரும் உயிரிழப்புகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications