கணவரை பழி தீர்க்க மனைவியை பலாத்காரம் செய்த இருவர்.. அதன் பிறகு அவர்கள் செய்த கொடூரம்!
Recommended Video

கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஒருவர் மீதான பகையை தீர்ப்பதற்காக அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம் நடந்துள்ளது.
ஜல்பய்குரி மாவட்டத்தில் பழங்குடி கிராமத்தில் கணவன் மீதான தனிப்பட்ட பகையை தீர்ப்பதற்காக அவரது மனைவியை பழி வாங்க ரத்ன முண்டா மற்றும் பரிமல் ராய் ஆகியோர் திட்டமிட்டனர். இதனிடையே சம்பவ தினமான சனிக்கிழமை இருவரையும் மது அருந்துவதற்காக வீட்டுக்கு வருமாறு அந்த பெண்ணின் கணவன் அழைத்துள்ளார்.

கணவன் வரவில்லை
இந்நிலையில் இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர். ஆனால் அந்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வரவில்லை. கணவன் இரவு 10 மணி வரை வீடு வராததால் அதிர்ச்சி அடைந்த பெண் இருவரையும் அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு கணவரை தேடி சென்றார்.

பாலியல் பலாத்காரம்
இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த இருவரும் அந்த பெண்ணை பின் தொடர்ந்தனர். அப்போது ஒரு குளத்தின் அருகே அந்த பெண்ணை மடக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இரும்புக் கம்பியை சொருகிய நபர்கள்
அதன்பிறகும் வெறி அடங்காததால் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை குத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ரிக்ஷா இழுக்கும் நபர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

நிர்பயா சம்பவம்
பாதிக்கப்பட்ட பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையின் விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் 2012-ஆம் ஆண்டு நிர்பயா சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயாவை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு அவரது மர்ம உறுப்பை இரும்பு கம்பியாலும் பாட்டிலாலும் தாக்கப்பட்ட கொடூரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications