புதைக்கப்பட்ட பெண் உடலை தோண்டி எடுத்து உறவு கொண்ட கொடூரன்.. உ.பியில் பயங்கரம்!
பதேபூர் சிக்ரி: பாலியல் பலாத்காரத்திற்குப் பெயர் பெற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லறையில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை வெளியே தோண்டி எடுத்து உறவு கொள்ள முயன்ற காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹதார் மாவட்டம் சடாபாத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் ஆக்ரா அருகே உள்ள பதேபூர் சிக்ரியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்து விட்டார் இதையடுத்து அந்த பெண்ணின் உடலை அவரது உறவினர்கள், அருகில் உள்ள லால் தர்வாசா சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.
மறுநாள் காலை அந்த பெண்ணின் உடல் கல்லறைக்கு வெளியே கிடந்துள்ளதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரது உடலில் பாலியல் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் காணபட்டதால், போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். மேலும் குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆக்ரா - ஜெய்ப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பதேப்பூர்சிக்ரியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ராஜேந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணின் உடலை புதைத்து விட்டு சென்ற பிறகு இரவு மது அருந்தி விட்டு வந்து கல்லறையை தோண்டி உடலை எடுத்து பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அந்த பெண்ணின் உடல் பரிசோதனைக்கு பிறகு மீண்டும் 2வது முறையாக உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது.