பெங்களூரில் 4 பேரால் பலாத்காரம் செய்து 2வது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பாலியல் தொழிலாளி
பெங்களூர்: பெங்களூரில் 26 வயது பாலியல் தொழிலாளியை நான்கு பேர் பலாத்காரம் செய்து அவரை இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் பெங்களூரில் வந்து பாலியல் தொழில் செய்து வருகிறார். அவர் சனிக்கிழமை பெங்களூரில் உள்ள அவுட்டர் ரிங் ரோட்டில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒருவர் வந்து வாடிக்கையாளர் ஒருவர் இருப்பதாகக் கூறி அந்த பெண்ணை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
ஹெச்.எஸ்.ஆர். லே அவுட்டில் உள்ள லாட்ஜுக்கு அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். லாட்ஜில் உள்ள ஒரு அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு 4 ஆண்கள் அவருக்காக காத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அந்த 4 பேரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அவரை லாட்ஜின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாணி விலாஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு அவர்கள் போன் செய்த எண்ணை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications