நிலம் விற்று கிடைத்த ரூ.55 லட்சமும் செல்லாத பணமா போயிருமோ... அதிர்ச்சியில் தெலுங்கானா பெண் தற்கொலை
500,1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகபூபாபாத்: தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் வினோதா என்பதாகும். இந்த பெண் மெகபூபாபாத் மாவட்டம் சனிகாபூரை சேர்ந்தவர். 55 வயதாகும் வினோதா தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று 55 லட்சம் ரூபாயை வைத்திருந்தார்.
பணம் அனைத்தும் 500 ரூபாய், 1000 ரூபாய் பண்டல்களாக இருந்தது. கணவனும், மனைவியும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரதமர் மோடி திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கவே வினோதா அதிர்ச்சிடையந்தார். பணம் முழுவதும் செல்லாமல் போய்விட்டதே என்று அலறினார்.

வினோதாவிற்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். நிலம் விற்ற பணத்தை பங்கு பிரித்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் 1000 மற்றும் 5000 ரூபாய் பணத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார் மோடி.
இதைக் கேள்விப்பட்ட உடன் குழப்பத்தில் இருந்த பெண், பணத்தை மாற்றுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருந்தார். அதே யோசனையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள வினோதாவின் கணவர், பணத்தை வீட்டில் வைத்திருந்தது தவறாகிவிட்டது.

பணம் செல்லாமல் போய்விட்டதாக டிவியில் பார்த்து மகன் கூறியதால் அதிர்ச்சியில் அந்த பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் மொத்த பணத்தையும் குழந்தைகள் பங்கு கேட்டதால் வினோதா தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. பணத்தை எப்படி மாற்றுவது என்ற விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலே தற்கொலை செய்து கொண்டார் வினோதா. இந்த சம்பவம் சனிகாபூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications