ஆம் ஆத்மியில் இணைந்தார் பழங்குடி இன பெண் தலைவர் சோனி சோரி...

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சமூக ஆர்வலர் சோனி சோரி மற்றும் "இன்போசிஸ்' நிறுவன, முன்னாள் மூத்த அதிகாரிகளில் ஒருவரான பாலா ஆகியோர், "ஆம் ஆத்மி' கட்சியில் இணைந்துள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோனி சோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நேற்று ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அது போல் இன்போசிஸ் நிறுவன முன்னாள் அதிகாரி பாலாவும் ஆம் ஆத்மி கட்சியில் நேற்று இணைந்தார்.
இது பற்றி சோனி சோரி நிருபர்களிடம் கூறியதாவது "அரசியலில் எனக்கு விருப்பம் கிடையாது. சாதாரண வாழ்க்கை வாழவே பிரியப்படுகிறேன். ஆனால், போலீஸ் காவலில் இருந்த போது, அங்கு நடந்த கொடுமைகள், என் எண்ணத்தை மாற்றியுள்ளது. இப்போது, ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications