பிறந்து 15 நாட்களே ஆன பெண் சிசு– 20 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசிய தாய் கைது!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி விற்க முயன்ற தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பன்சிலால்பேட் பகுதியை சேர்ந்த வெங்கடலட்சுமி .
அப்பெண்மணி தனது பிறந்த குழந்தையை விற்பதற்காக மாதவி என்பவரிடம் புரோக்கர்கள் மூலமாக பேரம் பேசி வருவதாக காந்தி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, அந்த கும்பலை சுற்றிவளைத்த போலீசார் குழந்தையை விற்க முயன்ற தாய் வெங்கடலட்சுமி, வாங்க முன்வந்த மாதவி, புரோக்கர்கள் கங்காதர் ரெட்டி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
வெங்கடலட்சுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, குடும்ப வறுமையை போக்கிக் கொள்ள அந்த பெண் குழந்தையை விற்க முனைந்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது, அந்த குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ள போலீசார், குற்றவாளிகள் நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications