மும்பை ஹாஜி அலி தர்காவில் 5 ஆண்டுகளுக்குப் பின் பெண்கள் வழிபாடு!
மும்பையில் உள்ள பிரபலமான ஹாஜி அலி தர்காவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வழிபாடு நடத்தினர். இதனால் இஸ்லாமிய பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக சமத்துவம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: நீதிமன்ற போராட்டம், ஆர்ப்பாட்டம் என கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் குழுவினர் மும்பை ஹாஜி அலி தர்ஹாவில் இன்று பிற்பகலில் உள்ளே சென்று வழிபாடு நடத்தினர்.
மும்பையில் அரபிக் கடலை ஒட்டியுள்ள ஹாஜி அலி தர்காவில் பிற்பகல் 3 மணி அளவில் பெண்கள் குழுவினர் வழிபாடு நடத்தியதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சமத்துவம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாரதிய இஸ்லாம் மகிளா அந்தோளன் அமைப்பின் இணை நிறுவனர் நூர்ஜஹான் எஸ்.நியாஸ் கூறியதாவது:
தற்போது இந்த தர்காவில் பெண்கள் வழிபாடு வழக்கமாகி விட்டது. நாங்கள் யாரிடமும் அனுமதி வாங்காமல் அங்கு சென்று வழிபட்டுவிட்டு திரும்பினோம்.கடந்த 2012-ம் ஆண்டு வரை இத்தர்காவில் குறிப்பிட்ட சில பகுதி வரை சென்று வழிபட்டு வந்தோம்.
ஆனால் அதனை திடீரென நிறுத்தி விட்டனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை அணுகியும், தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தியும் இந்த உரிமையை மீட்டுள்ளோம் என்றார் அவர்.
தர்கா நிர்வாகிகள் சில மாற்றங்கள் செய்வதற்காக 4 வாரங்கள் அவகாசம் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் தர்காவில் சென்று வழிபாடு நடத்தியதாகவும், அமைதியை வலியுறுத்தி பிரார்த்தனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் 24-ம் தேதி பெண்களையும் தர்காவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களையும் ஆண்களுக்கு நிகராக நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
இந்நிலையில் மும்பை ஹாஜி அலி தர்காவில் இஸ்லாமிய பெண்கள் வழிபாடு நடத்தி இருப்பது அந்த மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications