சிங்னாப்பூர் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தினால் பலாத்காரம் அதிகரிக்கும்- சொல்வது சங்கராச்சாரி
மும்பை: சிங்னாப்பூர் கோவில் கருவறையில் பெண்கள் வழிபாடு நடத்தினால் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று துவராகை சங்கராச்சரியா ஸ்வாமி ஸ்வரூப்பானந்த் சரஸ்வதி கருத்து தெரிவித்து சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சிங்கான்ப்பூர் சனி பகவான் கோவில் கருவறையில் பெண்கள் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்பின் கோரிக்கை. இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இது தொடர்பாக வழக்குகளும் நடத்தப்பட்ட நிலையில் கோவில் கருவறையில் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனடிப்படையில் கருவறைக்குள் நுழைய முயன்ற பெண்கள் பலரும் தடுக்கப்பட்டனர்.
இதனிடையே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சரியா ஸ்வாமி ஸ்வரூப்பானந்த் சரஸ்வதி, தற்போதைய மகாராஷ்டிரா வறட்சிக்கு சாய்பாபா வழிபாடுதான் காரணம்.
சிங்னாப்பூர் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தினால் பலாத்காரங்கள் அதிகரிக்கும் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.