நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மகளிர் ஒதுக்கீடு, லோக்பால் மசோதாவுக்கு முன்னுரிமை
டெல்லி: குளிர்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.
நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது கமல்நாத் பேசியதாவது:
மூன்று அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா, லோக்சபாவில் நிலுவையில் உள்ள எட்டு மசோதாக்கள், ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ள ஏழு மசோதாக்கள் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். லோக்சபாவில் புதிதாக 10 மசோதாக்களையும், ராஜ்யபசாவில் மூன்று புதிய மசோதாக்களையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா, அரசுப் பணி பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு கமல்நாத் தெரிவித்தார்.
இதனிடையே நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழக உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்னைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications