ராமர் பாலத்திற்கு சேதமில்லாமல் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றுவோம் - மத்திய அரசு
ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் அகற்றப்பட மாட்டாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
தாக்கல் செய்து உள்ள பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவித்து, அதற்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது மனுதாரர்களின் கோரிக்கை.

ராமர் கட்டிய பாலம்
ராமபிரான் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கையைச் சென்றடைய உருவாக்கப்பட்டதுதான் இப்பாலம் என்று புராணங்கள் கூறுகின்றன. ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது என்று ஒருத்தரப்பினரும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ராமர் பாலம் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவிருந்தனர்.

சேதுவிற்காக ராமர் பாலம்
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் சுப்ரமணியசுவாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு
இவ்வழக்கு கடந்த நவம்பர் மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட மூவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணிய சுவாமி, இவ்வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மத்திய அரசுக்கு உத்தரவு
மத்திய அரசு வழக்கறிஞரோ சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள் 6 வார காலத்திற்குள் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ராமர் பாலத்தை இடிக்கமாட்டோம்
அப்போது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சேது சமுத்திரத்திற்காக ராமர் பாலத்தை இடிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளது. ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசின் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டம் கடந்து வந்த பாதை
சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுக்கு பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டார். அப்போது ராமர் பாலம் தகர்க்கப்படாமல் இருக்கவும் திட்டமிட்டார். 2004ம் ஆண்டு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு மத்தியில் அமைந்த உடன் ராமர் பாலத்தை இடித்து சேதுசமுத்திர திட்டத்தை அமல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications