சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு உதவி செய்ய மாட்டோம்: ஆர்.எஸ்.எஸ்
நாக்பூர்: மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் தங்களது உதவியை எதிர்பார்க்க வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உதவி செய்தது. அதே நேரத்தில் மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ்.விருப்பத்தை மீறி அமித்ஷா பாஜக தலைவராக்கப்பட்டார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு இன்று அமித்ஷா சென்றார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, சட்டசபை தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உதவியை எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று அமித்ஷாவிடம் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் டெல்லியில் பெரும்பான்மை பெறாத நிலையில் பாஜக ஆட்சி அமைக்கக் கூடாது; மீண்டும் தேர்தலைதான் சந்திக்க வேண்டும் என்றும் அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்கள் அறிவுறுத்தியும் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications