உஷாரா இருங்க! 'பாஜகவை வசமா சிக்க வைக்கலாம்'.. அமைச்சர்களை அலர்ட் செய்த மம்தா.. ஏன் தெரியுமா?
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்த கேபினட் கூட்டத்தில் அமைச்சர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ''மிகவும் கவனமாக பணியாற்றுங்கள். ஒரு நிமிடம் கூட அசந்துவிடாமல் எப்போதும் கவனமாக இருங்கள்.. பாஜனதாவினரை சிக்க வைக்கலாம்" என்று கூறியுள்ளார்.
Recommended Video
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார் மம்தா பானர்ஜி.
ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 4 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும் புதுமுகங்கள் 8 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

கேபினட் கூட்டம்
இதில் பாஜகவில் இருந்து விலகி சென்ற பாபுல் சுப்ரியோவும் அடங்குவார். பாபுல் சுப்ரியோவுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சரவை மாற்றி அமைத்த பிறகு முதல் முறையாக கேபினட் கூட்டத்தை மம்தா பானர்ஜி கூட்டினார். அப்போது அமைச்சர்கள் முன்னுரிமை அளித்து செயலாற்ற வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக அமைச்சர்கள், தங்களின் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

படிக்காமல் கையெழுத்து போடக்கூடாது
வருமான வரி தாக்கல் செய்த பிறகு, வருமான வரி ஆணையம் அளிக்கும் ஆவணத்தின் நகலை தலைமைச்செயலாளர் அலுவலகத்திலும் கொடுக்க வேண்டும் என்றார். மேலும், ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடுகளையும் தனித்தனியாக கண்காணிப்பேன் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்தார். இதற்கு அடுத்தபடியாக மம்தா பானர்ஜி விடுத்த அறிவுறுத்தல்தான் ஹைலட்ஸ். மம்தா பானர்ஜி அமைச்சர்களிடம் கூறுகையில், ''அமைச்சர்கள் எந்த ஒரு கோப்புகளையும் முழுக்க படிக்காமல் கையெழுத்து போடக்கூடாது.

கவனமாக பணியாற்றுங்கள்
எதுவும் எழுதப்படாத வெள்ளை காகிதங்களில் கையெழுத்திடக்கூடாது. கையெழுத்துக்கு மேலேயும் கீழேயும் எதையும் எழுதி வைத்து விடும் அளவுக்கு இடம் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பதை உறுதி செய்தே கையெழுத்திட வேண்டும். பாஜக ஒரு பொறியை வைத்துள்ளது. ஸ்டிங் ஆப்ரஷேன் நடத்துவதற்காக 500 பேரை பல்வேறு வழிகளிலும் நியமித்து இருக்கிறார்கள். எனவே, மிகவும் கவனமாக பணியாற்றுங்கள். ஒரு நிமிடம் கூட அசந்துவிடாமல் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது தான் பாஜனதாவினரை சிக்க வைக்க முடியும்" என்றார்.

போலீஸ் பைலட் வாகனத்துடன் வரக்கூடாது
தொடர்ந்து அமைச்சர்களின் கார்களில் சிவப்பு மற்றும் புளூ நிறங்களில் விளக்குகள் இருக்கூடாது என்ற விதியை நினைவுபடுத்திய மம்தா பானர்ஜி, எந்த ஒரு அமைச்சரும் கொல்கத்தா நகருக்குள் போலீஸ் பைலட் வாகனத்துடன் வரக்கூடாது என்றும், வெளி மாவட்ட அமைச்சர்கள் கொல்கத்தா நகருக்குள் வரும் போது பைலட் வாகனத்தை விட்டு விட்டு விட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக பார்த்தா சட்டரிஜி சிறையில் உள்ள நிலையில், மம்தா இப்படி சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications