70 வருட சுதந்திர இந்தியாவில் எந்த காந்தி ஜெயந்தி அன்றும் இப்படி நடக்கவில்லை!

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரணி நடத்துவதற்காக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டி இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரணி நடத்துவதற்காக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டி இருக்கிறார்கள். காந்தி ஜெயந்தி அன்று விவசாயிகள் இப்படி மோசமாக தாக்கப்படுவது இதுவே முதல்முறை.

மத்திய பாஜக அரசுக்கும், அரசின் விவசாய கொள்கைக்கும் எதிராக விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 23ம் தேதி இந்த பேரணி தொடங்கியது.

உத்தரகாண்டின் ஹரித்வாரில் தொடங்கிய இந்த பேரணி நடைபயணமாக டெல்லியில் சென்று முடிவடையும். டெல்லியில் உள்ள கிசான் காட் என்ற பகுதியில் இந்த பேரணி முடிவடையும்.

[ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தின் பின்னணி இதுதான்.. ஸ்டாலின் பரபர அறிக்கை ]

தாக்கினார்கள்

இந்த பேரணி இன்று டெல்லிக்குள் நுழையும் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த பேரணியில் 5000க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளது.

இப்படி நடக்கவில்லை

70 வருட இந்திய வரலாற்றில் ஒருமுறை கூட காந்தி ஜெயந்தி அன்று இப்படி விவசாயிகள் தாக்கப்பட்டது இல்லை என்று இவர் கூறியுள்ளார்.

மோடி அரசு மோசம்

மோடி அரசு விவசாயிகளை குற்றவாளிகள் போல் நடத்துகிறார்கள். மிக மோசமான செயலை மோடி அரசு செய்துள்ளது என்று இவர் கூறியுள்ளார்.

எப்படி பின்பற்றும்

காந்தி ஜெயந்தி அன்று விவசாயிகளை தலைநகரில் காந்திய வழியில் அமைதியாக பேரணி செய்ய கூட அனுமதிக்க அரசா, காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் என்றுள்ளார் இவர்.

அர்பன் நக்சல்

காந்தி ஜெயந்தி அன்று விவசாயிகளை தீவிரவாதிகளை நடத்துவது போல அரசு நடத்துகிறது. மத்திய அரசு இதில் விளக்கம் அளிக்க வேண்டும். விவசாயிகளை அரசு என்ன ஆண்டி நேஷனல், அர்பன் நக்சல் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

இந்த போராட்டத்தில் விவசாயிகளை தாக்கியது மத்திய ரிசர்வ் படை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+