காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் பதவி!
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாதியான சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலின் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் என்ற நிலையில் அமைச்சருக்கு இணையான பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஒரு தனி தேசிய இனம்; தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தனிநாடு என விடுதலை பெற வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் கொள்கை. இதன் தலைவர் யாசின் மாலின்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் யாசின் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் யாசின் மாலிக் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் மீதான வழக்குகளில் வீடியோ கான்பரன்ஸில் மட்டுமே ஆஜராகி வந்தார். திடீரென உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் யாசின் மாலிக் ஆஜர்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதனால் சிறைத் துறை அதிகாரிகள் இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசில் யாசின் மாலிக் மனைவிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் காகர் ஆலோசகராக முஷால் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாசின் மாலிக்கின் மனைவி. இடைக்கால பிரதமரின் ஆலோசகர் என்றாலும் அமைச்சருக்கு இணையான தகுதி பெற்றவர். முஷால் ஹூசைனின் இந்த நியமனம் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
யாசின் மாலிக்- முஷால் ஹூசைன் திருமணம் 2009-ம் ஆண்டு நடைபெற்றது. 2014-ம் ஆண்டு யாசின் மாலிக் மனைவி என்ற அடிப்படையில் முஷால் ஹூசைன் இரு முறை இந்தியா வருகை தந்தார். 2015-ம் ஆண்டு முஷால் ஹூசைனுக்கு விசா மறுக்கப்பட்டது. அப்போது மத்திய அரசை விமர்சித்து முஷால் ஹூசைன் பேட்டி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications