கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் பதவிப் பிரமாணம் செய்த எடியூரப்பா!
Recommended Video

பெங்களூர்: கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும் எடியூரப்பா, கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் பதவி பிரமாணம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக்க எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். பாஜக கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், ஆளுநர் பாஜக கட்சியையே ஆட்சி அமைக்க அழைத்தார். மாறாக 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக அவர் பதவி ஏற்றுள்ளார். இதோடு அவர் மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார்.
இவர் பதவி ஏற்கும் போது பாஜக தொண்டர்கள் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினார்கள், அதேபோல் பதவி ஏற்றபின் எடியூரப்பா என்று கோஷம் எழுப்பினார்கள். எடியூரப்பா, கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் பதவி பிரமாணம் செய்துள்ளார். அதேபோல் முதல் கையெழுத்தாக, விவசாய கடன்களை தள்ளுபடி செய்கிறார்.












Click it and Unblock the Notifications