நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்’ - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்’ என்று ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்றத்தில் அமளி நீடித்ததால் மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் ஐந்தாம் தேதி முதல் கூடியது. அப்போதில் இருந்தே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஏற்படுத்தி வந்ததால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

காவிரி விவகாரத்தை வலியுறுத்தி தமிழக அதிமுக எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர தெலுங்கு தேச கட்சி எம்பிக்களும் தொடர்ந்து அமளி ஏற்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் ராஜ்யசபா கூடிய நிலையில் காவிரி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் செய்தன. இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அப்போது பேசிய ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தக்கூட்டத்தொடரில் இதுவரை ஒரு மசோதா கூட தாக்கல் செய்யப்படவில்லை. இது மிகவும் மோசமான நிலை. இந்த நாடும் மக்களும் வளர்ச்சியை விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் அனைவரும் மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள்.
இந்த அவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே, தயவு செய்து அமளியில் ஈடுபடாதீர்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications