வன்முறையாளர்களிடம் சரணடைந்துவிட்டீர்கள்.. ஹரியானா அரசு மீது ஹைகோர்ட் பாய்ச்சல்
டெல்லி: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பஞ்ச்குலாவில் வெடித்த வன்முறைகளுக்காக மாநில அரசாங்கத்தை கடுமையாக கண்டித்துள்ளது.
நீங்கள் உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நகரத்தை எரிந்து போக அனுமதித்தீர்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியது. ஹரியானா அரசாங்கம் வன்முறையாளர்களிடம் சரணடைந்துவிட்டதாக தெரிகிறது என்றும் கோர்ட் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை ராம் ராகிம் மீதான பலாத்கார வழக்கில் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்ததும், தேரா சச்சா அமைப்பு ஆதரவாளர்கள் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெருமளவில் வன்முறைக்கு வழிவகுத்தனர்.
தீர்ப்பு வெளியாகும் முன்பே "தேவைப்பட்டால், படைகளை பயன்படுத்தத் தயங்காதீர்கள்" என்று உத்தரவிட்டும் அரசு அலட்சியம் காட்டியதால், கலவரம் பெரிதானது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்திய பின்னர், நீதிமன்றம் இரண்டு தேரா சச்சா சொத்துக்களை முடக்கி உத்தரவிட்டு, இழப்பை ஈடுகட்ட அதை பயன்படுத்த உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications