என் பொண்ணை விட்ரு.. அவளுக்கு நிச்சயமாய்ருச்சு.. கோபமடைந்த இளைஞர்.. மேரிக்குட்டி பரிதாப பலி!
பெண்ணை கொலை செய்த மதுரை இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

கொல்லம்: "என் பொண்ணை விட்டுடு.. அவளுக்கு வேற இடத்தில் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கேன்" என்று சொன்னதும், ஆத்திரத்தில் மேரிகுட்டியை கொலை செய்த மதுரை இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் குளத்துப்புழா என்ற இடத்தைச் சேர்ந்த தம்பதி வர்கீஸ் - மேரிக்குட்டி. வர்கிஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் பெயர் லிசா. மும்பையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், லிசாவுக்கு சதீஷ் என்ற இளைஞர் ஃபேஸ்புக்கில் அறிமுகமானார். அந்த நட்பு காதலாக மாறியது. ஃபேஸ்புக் லவ் ரொம்ப தீவிரமாக போய் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று லிசாவுக்கு வீட்டில் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்கள்.

கொரியர் - சதீஷ்
இதனால் லிசா, சதீஷூடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டார். இதனால் சதீஷ் மிகவும் கவலையும், குழப்பமும் அடைந்தார். எனவே நேற்று முன்தினம் மதுரையில் இருந்து கிளம்பி சதீஷ் நேராக ஒரு காரை வாடகைக்கு பிடித்து கொண்டு குளத்துப்புழாவுக்கே வந்துவிட்டார். லிசா வீட்டிற்கு வந்து "கொரியர்" என்று சத்தம் போட்டார்.

மகளை விட்டுடு
அப்போது லிசாவின் அம்மா மேரிக்குட்டிதான் கதவை திறந்தார். அவரை பார்த்ததும் சதீஷ், லிசாவை காதலிப்பதாகவும் அவளை தனக்கு கல்யாணம் பண்ணி தருமாறும் கேட்டார். இதைக் கேட்டு நானும் மேரிக்குட்டி ஷாக் ஆகி நின்றார். பின்னர் சுதாரித்து கொண்டு, தன் மகளை விட்டுவிடு... அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்திருக்கிறோம் என்றார்.

சரமாரியாக குத்தினார்
ஆனால் சதீஷ் விடவே இல்லை.. தொடர்ந்து லிசாவை கல்யாணம் செய்து தருமாறு கேட்டு கொண்டே இருக்க.. மேரிக்குட்டி மறுப்பு சொல்லி கொண்டே இருந்தார். பிறகு ஆத்திரமடைந்த சதீஷ், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து மேரிகுட்டியை சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த மேரிக்குட்டி வலியால் அலறி துடித்து வீட்டுக்கு வெளியே வந்து சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

சதீஷ் கைது
அப்போது ரத்தவெள்ளத்தில் மேரிக்குட்டி துடித்து கொண்டிருக்க, கையில் கத்தியுடன் பக்கத்தில் சதீஷ் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சதீஷை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் மேரிக்குட்டியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மேரிக்குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது கொல்லம் போலீசார் சதீஷ் உட்பட கார் டிரைவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications