காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட வாலிபர்
விஜயவாடா: ஆந்திராவில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பாயகாபுரத்தைச் சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 19 வயதான அவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருப்பவரின் மகனான சேசு(21) என்பவரை காதலித்துள்ளார். ராதாவும், சேசுவும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ராதாவுடன் உல்லாசமாக இருந்தபோது அதை சேசு தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்நிலையில் சேசு அந்த வீடியோவை வாட்ஸ்ஆப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்ப அது பாயகாபுரம் முழுவதும் தீயாக பரவிவிட்டது. தானும், சேசுவும் உல்லாசமாக இருக்கையில் எடுத்த வீடியோ ஊர் முழுவதும் பரவியது ராதாவுக்கு தெரியவந்தது. ஆனால் அவர் இது குறித்து போலீசில் புகார் அளிக்க தயங்கினார்.
இது குறித்து அறிந்த அகில பாரத மகளிர் அமைப்பினர் போலீசை அணுகி சேசுவை கைது செய்யக் கோரி புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சேசுவை தேடி வருகிறார்கள்.
சேசுவை போலீசார் விரைவில் கைது செய்யாவிட்டால் போராட்டத்தில் குதிக்க மகளிர் அமைப்பு முடிவு செய்துள்ளது. முன்னதாக குண்டூரில் 2 வாலிபர்கள் இளம்பெண் ஒருவரை கடத்தி பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து சி.டி.யாக வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications