பெயர் குழப்பத்தால் அப்பாவி வாலிபர் குத்திக்கொலை! பழிவாங்க வந்த கும்பல் வெறிச்செயல்!!
டெல்லி: பெயர் குழப்பம் காரணமாக, பழிவாங்க வந்த கொலையாளிகள் அப்பாவி வாலிபரை குத்தி கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி, வாசிர்பூர் மார்க்கெட் பகுதியில் கடந்த வாரம் சஞ்சீவ் ரானா என்ற வாலிபர் நான்குபேர் கும்பலால் கொல்லப்பட்டார். இந்த கொலையில் கொலு என்ற வாலிபருக்கு தொடர்பு உள்ளது.

பழிவாங்க தேடுதல்
கொலை செய்யப்பட்ட நபரின் உறவுக்காரர்கள், கொலையாளி கொலுவை பழிவாங்க தேடிக்கொண்டிருந்தனர்.

மார்க்கெட் வருவதாக தகவல்
இந்நிலையில், அதே மார்க்கெட் பகுதிக்கு கொலு நேற்று வருவதாக தகவல் கிடைத்தது. கொலையாளியை நேரில் பார்க்காத மூன்றுபேர் மட்டும், மார்க்கெட்டுக்கு தேடி போயுள்ளனர். அடையாளங்களை வைத்து 21 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரை சுற்றி வளைத்தனர்.

பெயரை சொன்னதும் குத்து
அவரிடம் உனது பெயர் என்ன என்று கேட்டுள்ளனர். அவரும் கொலு என்று பதில் அளித்துள்ளார். உடனடியாக சுற்றிவளைத்த மூன்றுபேரும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் கொலு அதே இடத்தில் உயிரிழந்தார்.

விசாரணையில் அம்பலம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சஞ்சய் என்ற 19 வயது வாலிபரையும், மேலும் இரு மைனர், கொலைகாரர்களையும் கைது செய்தனர். சஞ்சீவ் ரானா உறவுக்காரர்களான இவர்கள், பழிக்கு பழியாக கொலை செய்ததாக தெரிவித்தனர். விசாரணையில்தான், அவர்கள் கொல்ல வந்த கொலு இவர் கிடையாது, கொலையானது அப்பாவி என்று தெரியவந்தது.

பெயர் வச்சது குற்றமா?
டெல்லிவாலாக்களில் பலரது பெயர் கொலு என்று இருக்கும். ஆனால் அப்பாவி ஒருவரின் உயிர் அந்த பெயரால் பறிபோனது வேதனைக்குறியதே.












Click it and Unblock the Notifications