ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் அநியாயம்.. காண்டம்களில் சின்னம் பொறித்து விநியோகம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேச கட்சி ஆகியவை சார்பில் அவர்களுடைய கட்சி சின்னங்கள் பொறித்த ஆணுறைகள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி முடிவடைகிறது. அது போல் ஆந்திரா, அருணாச்சல், ஒடிஸா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைத் தேர்தல்களும் நடைபெறுகின்றன.

ஆந்திராவை பொருத்தமட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. வரும் தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அது போல் தெலுங்கு தேசம் கட்சியும் தற்போது ஆட்சிக்கு வர போராடி வருகிறது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அவர் எப்படியாவது இந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முயற்சிக்கிறார். இதனால் இரு தரப்பும் போட்டி போட்டுக் கொண்டு தங்களை பற்றி விமர்சனங்களை முன் வைத்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் பிரச்சாரத்திலும் புதுமைகளை புகுத்துவதாக எண்ணி அபத்தமானதை செய்கின்றன. அந்த வகையில் இரு கட்சிகளும் காண்டம் எனப்படும் கருத்தடை சாதனத்தில் தங்கள் கட்சியின் சின்னங்களை பதிக்கிறார்கள. அதை வாக்காளர்களுக்கும் விநயோகம் செய்கிறார்கள்.
இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications